மியான்மர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் பணி தீவிரம்

Date:

மியான்மரில் சிக்கியுள்ள 56 இலங்கையர்களை அவசர நடவடிக்கை மூலம் விடுவிக்க மியான்மர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மியான்மர் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், தீவிரவாத கும்பலுடன் பேச்சுவார்த்கைளை விரைவாக முன்னெடுக்க மியான்மர் அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் BINSTIC தூதர்கள் மியான்மர் வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையும் சாதகமான முறையில் முடிவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிக்கியுள்ளவர்களை உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...