வவுனியாவில் அதிகரித்து வரும் போதை ஆசாமிகளின் அட்டகாசம்

Date:

வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் (08.01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்,

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப் பகுதியில் மது அருந்திவிட்டு வந்த இளைஞர் குழு ஒன்று பணம் தருமாறு கேட்டு வீதியில் நடந்து சென்ற முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் நிறுவன ஊழியரை மிரட்டியதுடன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

குறித்த குழுவினர் இரண்டுக்கு மேற்பட்ட தடவை தாக்குதலை நடத்திய பின்னர் முற்சக்கர வண்டியில் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் வாகன இலக்கத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இவ்வாறான போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

வியாபார நிலையங்கள் அதிகமுள்ள மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் அதுவும் பகல் வேளைகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பொதுமக்களுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...