மைத்திரிபால சிறிசேன விரைவில் கைது

Date:

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் காலங்களில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமையால் கர்தினால் உட்பட பல தரப்பிலிருந்து கடுமையான அழுத்தங்கள் கிளம்பின.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மைக்காலமாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை இடைவிடாது தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், அவரைப் பாதுகாக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் கருத்தை வெளியிட்டுள்ளது.

அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மைத்திரிபால சிறிசேனவும் தாம் எதற்கும் தயார் என தனது நெருங்கிய சகாக்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...