மைத்திரிபால சிறிசேன விரைவில் கைது

Date:

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் காலங்களில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமையால் கர்தினால் உட்பட பல தரப்பிலிருந்து கடுமையான அழுத்தங்கள் கிளம்பின.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மைக்காலமாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை இடைவிடாது தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், அவரைப் பாதுகாக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் கருத்தை வெளியிட்டுள்ளது.

அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மைத்திரிபால சிறிசேனவும் தாம் எதற்கும் தயார் என தனது நெருங்கிய சகாக்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SJB தேசிய பட்டியல் எம்பி பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து...

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...