சஜித் பதவி விலக வேண்டும்

0
21

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 27 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்த மோதல் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தாலும், எந்தச் சூழலிலும் அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதில்லை என்று நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தன்னை தோல்வியடைந்த அமைச்சர் எனக் கூறி பதவி விலகுமாறு வலியுறுத்தியதை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

“நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதன் பொருள், எனது அமைச்சகத்தின் கீழ் நடந்த சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று அதைத் தீர்ப்பதே என் கடமை என்பதுதான். நான் பொறுப்பிலிருந்து தப்பிச் செல்லவில்லை. நான் என் கடமையை சரியாக செய்யவில்லை என்றால், ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் என் அரசியல் குழு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். தோல்வியடைந்ததால் ஒருவர் பதவி விலக வேண்டும் என்றால், முதலில் எதிர்க்கட்சித் தலைவரே பதவி விலக வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here