பெருந்தோட்ட பங்குகள் தனியாருக்கு விற்பனை – சஜித் குற்றச்சாட்டு

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மலையகத் பெருந்தோட்ட சமூகத்தின் பல பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் ஊழியர் சேமலாப நிதிகள் பல வருடங்களாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில தோட்டங்களின் பங்குகளை பல்வேறு வர்த்தகர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேயிலை விளைச்சலில் 70% க்கும் அதிகமான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் வழங்குவதாகவும், அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் குறைந்த பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தரிசு காணிகளை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அந்த தரிசு நிலங்களை வழங்கி அவர்களை தனது அரசாங்கத்தில் தொழில் முயற்சியாளர்களாக்க உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...