‘ஹெலிகாப்டர்’ கூட்டணியில் இருந்து விலகுகிறது சு.க

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து’ விலகத் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள சுயேட்சை எம்பிக்கள் குழுவுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியது.

‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் உருவாக்கப்பட்ட ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பு’ கடந்த வாரம் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் SLFP யின் ‘கை’ சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தல் விடுத்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...