தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்பட்டு அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புகளை அறிவிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
N.S