தேர்தலில் போட்டியிட உள்ள பெண் வெட்டிக் கொலை

0
171

மினுவாங்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினுவாங்கொடை, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அவரது வீட்டை எரித்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here