ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபைக்கான வேட்புமனுக்களை இன்று (21) கையளித்துள்ளதுடன், அவர்கள் முன்வைத்துள்ள குழுவில் இருந்து மேயர் வேட்பாளர் ஒருவரை அக்கட்சி நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் கொழும்பு மேயர் பதவிக்கு பொருத்தமான நபரை கட்சி தீர்மானிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் உட்பட முழு தேர்தல் நடைமுறையிலும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நபர் மேயர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.