உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பலமான முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது உள்ளுராட்சி பிரதிநிதிகளிடம் இன்று (25) அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைநாட்டு பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரமுகரான இந்த முன்னாள் அமைச்சர், தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து சிறிய பொதுக் கூட்டங்களையும் ரத்து செய்யுமாறு தனது உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.