மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக வணக்கத்திற்குரிய தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.