Saturday, July 27, 2024

Latest Posts

பெலியத்த கொலை, மேலும் இருவர் கைது

பெலியத்தவில் ஐவரின் கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மிரிஹான முகாமில் உள்ள அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுர்துவ பிரதேசத்தில் வைத்து காலி மாகல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரும், கதுருவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய தொழிலாளி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஐவரும் பயணித்த டிபெண்டர் தொடர்பில் தகவல் திரட்டிய சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதுடன், முதலாம் சந்தேகநபரிடம் 30 மில்லிகிராம் ஹெரோயினும், இரண்டாவது சந்தேகநபரிடம் 06 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.