Saturday, July 27, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.01.2024

1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டின் ICC ODI சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கையின் சாமரி அதபத்துவை பெயரிட்டுள்ளது.

2. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வேட்புமனுவை ஆதரிப்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தங்களை “புதிய கூட்டணி” என்று அழைத்துக் கொள்கிறது. ஜனவரி 27ஆம் திகதி அவர்களின் பிரச்சார கூட்டம் நடைபெறவுள்ளது.

3. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள ஜகத் பிரியங்கர, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தைத் தொடர்ந்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை நிரப்ப உள்ளார். பிரியங்கர, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினராவார்.

4. இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் துயர மரணம் தொடர்பில் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று போலியான கணக்குகளைப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் பதிவுகளை வெளியிடுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் இந்த அரசியல் கட்சியால் தங்கள் ஆதரவை அதிகரிக்கவும் மற்றவர்களை அவமதிக்கவும் சில காலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

5. பெலியத்தவில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெய்யந்தர நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

6. மாலைத்தீவில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் தங்கள் பணத்தை வீட்டுக்கு அனுப்ப “உண்டியலில்” தங்கியிருக்க வேண்டியிருப்பதால், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் தலையீட்டைக் கோருகின்றனர். மாலைத்தீவு வங்கிகள் அந்நாட்டில் அந்நிய செலாவணி பற்றாக்குறையின் மத்தியில் வாடிக்கையாளர்களுக்கு டொலர் விற்பனையை மட்டுப்படுத்தியுள்ளது.

7. அரசு நடத்தும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களைத் தவிர சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு வழங்குவதைப் போன்ற கூடுதல் கொடுப்பனவுக்கான அவர்களின் கோரிக்கைக்கான தீர்வுக்காக காத்திருக்கின்றனர். பிரச்சினைக்கு தீர்வுகாணத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பெப்ரவரி 1ஆம் திகதியை அரசு புதிய காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது.

8. ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்வதை கிரிமினல் குற்றமாக நிறுவ தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு எதிரான பலாத்காரச் சட்டங்களை வலுப்படுத்தவும் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

9. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையை இனிப்பு பண்ட தொழில்துறையில் ஒரு முக்கிய உலகளாவிய நிலைக்கு மாற்றுவதற்கான தனது நோக்கத்தை கோடிட்டுக் காட்டுகிறார். “மேட் இன் எஸ்எல்” சாக்லேட்டுகளுக்கான சாத்தியத்தை வலியுறுத்துகிறார்.

10. புதிய “ஆன்-லைன் பாதுகாப்புச் சட்டம்” ஜனநாயக விழுமியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் இலங்கைக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கூறுகிறார். வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கவும், சட்டம் அதன் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் அமெரிக்கா இலங்கையை வலியுறுத்துகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.