ஜனாதிபதியின் உத்தரவால் தேர்தல் ஆணைக்குழு சிக்கலில்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராகப் பிறப்பித்த உத்தரவு காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு கடும் சிக்கலில் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வரித் திருத்தங்கள் மூலம் வருமானம் கிடைக்கும் வரை மேலும் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை அரச நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவை மீறும் எந்தவொரு அதிகாரியும் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து செலவுகளை செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த உத்தரவு தேர்தல் ஆணையத்தின் கைகளைக் கட்டும் செயலாகும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான செலவுகள் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கடன்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு, போக்குவரத்து மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளும் எதிர்கால கொடுப்பனவின் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...