ஜனாதிபதியின் உத்தரவால் தேர்தல் ஆணைக்குழு சிக்கலில்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராகப் பிறப்பித்த உத்தரவு காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு கடும் சிக்கலில் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வரித் திருத்தங்கள் மூலம் வருமானம் கிடைக்கும் வரை மேலும் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை அரச நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவை மீறும் எந்தவொரு அதிகாரியும் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து செலவுகளை செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த உத்தரவு தேர்தல் ஆணையத்தின் கைகளைக் கட்டும் செயலாகும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான செலவுகள் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கடன்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு, போக்குவரத்து மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளும் எதிர்கால கொடுப்பனவின் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...