13 இந்திய மீனவர்கள் விடுதலை

Date:

கொழும்பு : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைதான 13 மீனவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 24-ம் திகதி மீன்பிடிக்க சென்ற 17 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 17 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 13 பேர் ரூ.50,000 அபராதம் செலுத்தினால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மன்னார் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரூ.50,000 கட்டினால் மட்டுமே விடுதலை என்ற உத்தரவு ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரில் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது இலங்கை நீதிமன்றம். 2 மீனவர்களும் படகோட்டி என்பதால் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2 மீனவர்களின் கைரேகை பதிவு தவறாக இருந்ததால் அவர்களின் வழக்கு மட்டும் பிப்.12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...