வளைகுடா உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம்

Date:

சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம் மாண்புமிகு கலாநிதி. நயீப் பலாஹ் எம். அல் ஹஜ்ரப் அவர்களை 2022 பிப்ரவரி 08ஆந் திகதி ரியாத்தில் உள்ள பேரவையின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

சுமூகமான இந்த சந்திப்பின் போது, வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம், வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம், வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவது முதலான பரஸ்பர நலன்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை மற்றும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கைக்கும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவைக்கும் இடையே கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தூதுவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆராய்ந்தனர்.

இலங்கைத் தூதரகம்,ரியாத்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...