இந்திய பிரதமர் மோடி இலங்கை விஜயம் !

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அவரது வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இலங்கைக்கு வருமாறு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் பீரிஸ் சந்தித்தார். பீரிஸை இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் சந்தித்துள்ளார்.
இந்தியாவிற்கும்; இலங்கைக்கு இடையிலான உறவு பரிவர்த்தனை உறவில் இருந்து மத்திய பங்காளித்துவமாக பரிணமித்துள்ளதாக சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இலங்கை எப்போதும் நம்பக்கூடிய உண்மையான நண்பன் இலங்கை என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்துள்ளனர் என்றார்.
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான நேரத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 2.4 பில்லியன் டொலர் நிதி உதவியை அமைச்சர் பீரிஸ் வரவேற்றுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பொருளாதார ஒத்துழைப்பு, வலிமை மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பு, இணைப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பரஸ்பர நலன்களின் பரந்த அளவிலான பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...