மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

Date:

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் கோரலே கெதர பியதிஸ்ஸ பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு தொழிலதிபரிடம் இருந்து 2 மில்லியன் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் மாவனல்லை பிரதேச சபையின் கைது செய்யப்பட்டார்.

கட்டிடத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக பணத்தை பெற்றுக்கொண்ட போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைதுசெய்துள்ளது.

அதே வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, மாவனல்லை பிரதேச சபையின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் தொடர்பில் ஆராயுமாறு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹன அனுரகுமாரவிடம் ஆளுநர் கொப்பேகடுவ பணித்துள்ளார்.

இதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி, மூன்று மாதங்களுக்குள் இது குறித்து விசாரணை நடத்தி, ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...