மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்கட்டண உயர்வால் நீர் விநியோகச் செலவு தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும் எனத் தெரிவித்த அதிகாரி, மின்கட்டண உயர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து புரிந்துணர்ந்த பின்னர் ஆலோசிப்பதாகத் தெரிவித்தார்.