எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் மீது தண்ணீர், கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு, கோட்டையில் உள்ள ஓல்கொட் மாவத்தை பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதசாரிகள் அல்லது வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்திபாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம் அல்லது காலி முகத்திடல் பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதையும் இந்த உத்தரவு தடுக்கிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...