மைத்திரியின் கருத்துக்கு அருட்தந்தை பதிலடி!

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என சிலுவையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் சட்டத்தின் முன் வந்து தான் நிரபராதி என நிரூபிக்க முடியும் எனவும் அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியுள்ளார்.

பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டத்தின் முன் இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சுமார் 30 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சத்தியம் செய்யாமல் சட்டத்தின் முன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...