இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
புதிய விலை மாற்றத்தின்படி,
ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கப்பட்டு ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1 அதிகரித்து ரூ.293 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.6 அதிகரித்து ரூ.329 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த விலை திருத்தம் அரசின் மாதாந்திர எரிபொருள் விலை நிர்ணய முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
