45 நாட்களுக்கு மூடப்படும் சபுகஸ்கந்த!

0
50

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் தினசரி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விதிகளின்படி, இந்த பராமரிப்பு பணிகள் 45 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக, எதிர்வரும் மூன்று வருடங்களுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகபட்ச உற்பத்தி திறன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here