கழிவுநீர் கால்வாயில் குதித்த’கதிரானவத்தை குடு ராணி’- மடக்கிப் பிடித்த மட்டக்குளி பொலிஸார்

Date:

கொழும்பு, மட்டக்குளியில் ‘கதிரானவத்தை குடு ராணி’ என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

யுக்திய நடவடிக்கையின்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்ய முற்பட்டபோது அவர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் குதித்துள்ளார்.

பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...