இன்று ஐதேகவின் ‘உண்மை’ குளியாபிட்டியில்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது மக்கள் பேரணி இன்று (10) பிற்பகல் 02.00 மணிக்கு குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரத்தின் ஆரம்பமாகும்.

இது “உண்மை” என்று அழைக்கப்படுகிறது.

“குறிப்பாக இந்த நாடு திவாலானபோது, இந்த நாடு அராஜகமானபோது, இந்த நாடு தனது தலைமைத்துவத்தை இழந்தபோது, தற்போதைய ஜனாதிபதி இந்த சவாலை ஏற்றுக்கொண்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு படிப்படியாக முன்னோக்கிச் சென்று, இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, இந்நாட்டு மக்களுக்கான நாளைய நாளை உருவாக்க உழைத்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இன்று முதல் தடவையாக குளியாப்பிட்டியவில் இருந்து இந்தப் போரை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளார்” என இது தொடர்பில் கருத்து கூறிய அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, பாலித ரங்கே பண்டார, சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...