Sunday, September 8, 2024

Latest Posts

மீண்டும் திறக்கப்பட்ட கோளரங்கம்

இன்று (மார்ச் 13) முதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக கோளரங்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கோளரங்கம் ப்ரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக பெப்ரவரி 27 முதல் நேற்று வரை மூடப்பட்டுள்ளது.

ப்ரொஜெக்டர்களின் பழுதுபார்ப்பு நடவடிக்கைகளின் பின்னர் இன்று முதல் கோளரங்கத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை திரையிடல் மற்றும் பொது திரையிடல் நேரங்கள் பின்வருமாறு.

செவ்வாய் முதல் வெள்ளி வரை மாணவர்கள் வருகைகள் நாள். காலை 10:00 மற்றும் மதியம் 1 மணி. மதியம் 2:00 மணிக்கு

பொதுமக்கள் பார்வைக்காக சனிக்கிழமை நாள். காலை 10:00 மற்றும் மதியம் 2:00 மணி

பாடசாலை அமர்வுகளை முன்பதிவு செய்வதற்கு 011 2586499 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.