சபாநாயகருக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று!

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் 19 ஆம் திகதி ஆரம்பமானது. முன்னதாக 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், எதிரணியின் கோரிக்கையின் பிரகாரம் விவாதத்துக்கு மேலும் ஒருநாள் ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களைப் புறந்தள்ளிய வகையிலேயே அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து, சபாநாயகரைக் காப்பாற்றுவதற்கு ஆளும் தரப்பும் பல்வேறுபட்ட வியூகங்களை வகுத்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...