Saturday, September 21, 2024

Latest Posts

சஜித் மீது சுமந்திரன் குற்றச்சாட்டு

அரசியமைப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது. இந்த விடயம்கூட சஜித் பிரேமதாசவுக்கு தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வக்கட்சி மாநாட்டின்போது புலம்பெயர் தமிழர்களின் முதலீடு தொடர்பில் பல தரப்பினரும் கருத்துகளை முன்வைத்தனர்.நாமும் அது தொடர்பில் கதைத்தோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் உதவுவார்கள் சுட்டிக்காட்டினேன்.

புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கான பாலமாக இருப்பதற்கு நாம் தயார்.இலங்கையின் பொருளாதாரத்தைவிடவும் புலம்பெயர் தமிழர்களின் பண பலம் உள்ளது. எனவே, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமானால் நிச்சயம் உதவி கிட்டும்.ஆனால் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே அவசியம்.

மாறாக ஆளுநர் வசம் அதிகாரங்கள் இருக்கக்கூடாது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் வசமே அதிகாரம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.