மொட்டுக் கூட்டணிக்கு பாய் சொல்லத் தயாராகும் காங்கிரஸ்..

Date:

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அரசாங்கத்துடன் தொடர்வதா அல்லது அரசாங்கத்தில் இருந்து விலகுவதா என ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத் தலைவர்களுடனான பிரச்சினைகளைக் காரணம் காட்டி, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்தும் கட்சி விலகியிருந்தது.

தற்போதைய அரசாங்கம் அமையும் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குவதாக பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் உறுதியளித்த போதிலும் அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தற்போதைய தலைவர் ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ள போதிலும் அதில் ஒன்று கூட தமது கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும் ஜீவன் கூறுகிறார்.

இது குறித்து ஆரம்பம் முதலே அதிருப்தியில் இருந்த அக்கட்சி, அரசாங்க நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றது.

அமைச்சரவைப் பதவி வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் விரைவில் முடிவெடுக்க உள்ளதாக தெரியவருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....