Thursday, March 28, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27/03/2023

1.IMF இன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 4 வருட கடன் வசதியை அரசாங்கம் வரவு செலவுத் திட்ட உதவிக்காக பயன்படுத்த முடியும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்: வரிகளில் எந்தவொரு மாற்றமும் சர்வதேச நாணய நிதியத்தின் முன் அனுமதியுடன் இருக்க வேண்டும் என்றும் இலங்கையில் எவருக்கும் எந்த மாற்றத்தையும் செய்ய அதிகாரம் இல்லை என்றும் ஒப்புக்கொண்டார்.

2.அரசாங்கத்தின் ஆலோசகர் இந்திரஜித் குமாரசுவாமி, “வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு” 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான இந்திய ரூபாய் வர்த்தகத்துக்கு அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறுகிறார் : குமாரசாமி முன்பு மத்திய வங்கியின் ஆளுநராகவும், அமெரிக்க உள் வர்த்தக குற்றவாளி ராஜ் ராஜரத்தினத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி இருந்தார்.

3.உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி, IMF உடன்படிக்கைக் காலத்தில், இலங்கை முக்கியமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளுக்கு 2,533 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கும் என கணித்துள்ளது: மத்திய வங்கி ஏற்றுமதி மற்றும் பணப்பரிமாற்றங்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரிப்பது கட்டாயமானது : IMF இலிருந்து 2023 மார்ச் & செப்டம்பரில் ஆகிய இரு தவணைகளில் சுமார் USD 331.2 மில்லியனை கடனாக இலங்கை பெறும்.

4.அரச ஊழியர்களை ஓய்வு பெறும் வரை தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க பணிகளுக்காக முழு நேரமும் விடுவிக்க முடியும் என ஜனாதிபதியின் பணிப்பாளர்-தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க தாதியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

5.அடுத்த 4 மாதங்களில் 100-150 பொருட்களின் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் என்று மூத்த திறைசேரி அதிகாரிகள் கூறுகின்றனர், இந்த நடவடிக்கை மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால் முன்னெடுக்கப்படும். என்றாலும் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறுகின்றனர்.

6.சட்டத் துறையின் செயல்முறையை வழிநடத்துவதற்கு சட்டத்தரணிகள் மிகவும் முக்கியமானவர் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய கூறுகிறார்: சட்டத்தரணிகள் சங்கத்தின் 49 ஆவது தலைவராக பதவியேற்றுள்ள கௌசல்யா நவரத்னவில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

7.திறைசேரியின் கீழ் உள்ள சுமார் 450 எரிபொருள் நிலையங்களை உள்ளூர் எரிபொருள் சந்தையில் நுழையவுள்ள 3 புதிய சர்வதேச நிறுவனங்களுக்கு விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி தெரிவித்தார். .

8.நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி அலகு ஒன்றிலிருந்து மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அனல் எண்ணெய் மின் நிலையங்களை இயக்குவதற்கு CPC யிடமிருந்து மேலதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபை நாளொன்றுக்கு சுமார் 800 மில்லியன் ரூபாவை (முன்னர் திட்டமிடப்பட்டதை விட 200 மில்லியன் ரூபா அதிகம்) செலவிடவுள்ளது.

9.சர்வதேச நாணய நிதியம் “இரட்டைப் பேச்சு” என்று குற்றம் சாட்டுகிறார் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல: என்ன உத்தரவாதத்தின் பேரில் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கத் தொடங்கியது என்பதை விளக்குமாறும் கோருகின்றார்: மக்கள் ஆணை இன்றி பதவியில் இருக்கும் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் கடன்களை மதிக்க முடியாது என்று கூறுகிறார்.

10.”உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு” ஏற்பட வேண்டும் என IMF வலியுறுத்துகிறது என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கவலை வெளியிடுகிறார் : ரூ.14 ட்ர்லியன் உள்நாட்டுக் கடனில் பெரும்பகுதி EPF மற்றும் உள்ளூர் வங்கிகளால் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டுள்ளது என சில்வா கூறினார். கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றில் IMF திட்டத்துக்கு ஆதரரித்தவர் இவர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.