பசிலுக்கு எதிராக களமிறங்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் !

Date:

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் மஹா சங்கத்தினர் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணமடையாதவர்களின் வீட்டிலிருந்து கடுகு விதையை கொண்டு வருமாறு கோதமியிடம் சிசா சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதேபோன்று  தற்போது வருத்தமடையாத வீட்டில் இருந்து ஒரு கோப்பை நீர் கொண்டு வருமாறு நானும் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நாட்டு அப்பாவி ஏழை மக்களுக்கு இவ்வாறான வலியை ஏற்படுத்த இந்த அரசாங்கம் தயாராக இருந்தால் நாமும் பாத யாத்திரையாக சென்று இந்த அரசாங்கத்தை உடனடியாக அனுப்ப வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என்பதனை தயக்கத்துடன் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் மீண்டுமொருமுறை பொறுப்பேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்படுவார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும். அதற்கான படிகள் என்ன என்பது தொடர்பில் 31ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராமயவில் கலந்து கொண்டு தீர்மானம் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் அதிசக்தி வாய்ந்த நபர்களாக மஹா சங்கத்தினர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...