துறைமுக நகருக்கான மேம்பால அதிவேக வீதி ஜூலையில் மக்கள் பாவனைக்கு

Date:

கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்குறுகடை, புறக்கோட்டை, அளுத்மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் துறைமுக நகரம் ஆகிய 5 உள்நுழைவுகளை இந்த அதிவேக வீதி கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக வீதிக்கு 28 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...