துறைமுக நகருக்கான மேம்பால அதிவேக வீதி ஜூலையில் மக்கள் பாவனைக்கு

Date:

கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்குறுகடை, புறக்கோட்டை, அளுத்மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் துறைமுக நகரம் ஆகிய 5 உள்நுழைவுகளை இந்த அதிவேக வீதி கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக வீதிக்கு 28 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...