களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் தீர்மானங்களுக்கு முரணான கருத்துக்களை ராஜித சேனாரத்ன தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் அவரது செயற்பாடுகள் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு கூறியுள்ளனர்.
ஆனால் இது தொடர்பான முடிவை கட்சித் தலைமை இன்னும் எடுக்கவில்லை எனவும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
N.S