Saturday, July 27, 2024

Latest Posts

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இனி நாட்டில் இடமில்லை

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமான இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே இடம்பெற்று வருவதாகவும், எந்தவொரு பக்கச்சார்பற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு தேவையான பின்னணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

குறுகிய அரசியல் இலக்குகள் மற்றும் பின்தங்கிய போக்குகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டியது அவசியமானது என ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.