அடுத்த பொது வேட்பாளர் சஜித் ; ஐ.தே.கவுக்கும் அழைப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் புதிய கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியாகவே இருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் இந்தக் கூட்டணியில் இணையலாம். ஐக்கிய தேசியக் கட்சியானது கூட்டணியில் ஒரு சிறிய கட்சியாக இணைய முடியும். ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது ஒரு சிறிய கட்சியாகும். ஏனெனில் அக்கட்சிக்கு உள்ள வாக்கு சதவீதம் மிகக்குறைவாகும்.

எமது பாரிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருப்பார்” – எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...