பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

0
131

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்குப் பிறகு அந்த பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக NPP கூட்டணிக்கு ஆதரவு வழங்கியதாகவும், அதற்காக பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான ஆதாரங்களைக் கொண்ட காணொளி ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல பௌத்த தேரர், SJB தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சமர்ப்பித்ததையடுத்து, குறித்த உறுப்பினர்களை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்க செயற்குழு தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீக்கப்பட்டவர்கள்:

  • நிஹால் மென்டிஸ் (குழுத் தலைவர்)
  • மொஹமட் நிஷார்ட்
  • காந்தி பெலவத்த
  • ஆயிஷா சாமலி
  • புஷ்பா சமரசிங்க

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினரிடம் மொத்தம் 16 உறுப்பினர்கள் இருந்ததாகவும், NPP-க்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறினார்.

மேலும், பணம் மற்றும் லஞ்சம் வழங்கி சஜப உறுப்பினர்கள் ஐவரை தங்கள் பக்கம் மாற்றிக் கொண்டதாக குற்றம்சாட்டிய அவர், இதுகுறித்து முன்பே புகார் அளித்திருந்ததாக தெரிவித்தார்.

பின்னர் கிடைத்த ஒலிப்பதிவு மற்றும் காணொளி ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதையடுத்து, விவகாரம் கட்சியின் செயற்குழு மற்றும் சட்ட ஆலோசகர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதியில் ஐவரையும் கட்சியிலிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், நீக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த மாத கூட்டங்களிலும் NPP முன்வைத்த அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவாக வாக்களித்ததாகவும், சஜபவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக, சட்டப்படி அடுத்தவரிசையில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜகத் விதான தெரிவித்தார்.

இந்தக் கருத்துகளை அவர் நேற்று (06) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here