சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊழியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக முறைப்பாடு கிடைக்கவில்லை!

Date:

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தனக்கு எவ்வித முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பில் முறையான முறைப்பாட்டைப் பெறுமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எனக்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை கேள்வியுற்ற நான், பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறையான முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிடவுக்கு அறிவுறுத்தியுள்ளேன். முறையான முறைப்பாடு அளிக்கும்படி அவர் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்திருக்கிறார்” என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை உதவிகளை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பெண் சட்டத்தரணி ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றில் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...