ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – சம்பிக்க அறிவிப்பு

Date:

இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு மற்றவர்களிடம் இல்லாத பல தகுதிகள் தனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் தந்தையின் பரம்பரையிலோ, வேறு அரசியல்வாதியின் இடத்திலோ அரசியலுக்கு வந்தவன் அல்ல என்றும், அமைச்சர் என்ற பொறுப்பை மோசடி, ஊழலின்றி நிறைவேற்றி, அமைச்சை லாபகரமாக்கியதை நாடு அறியும் என்றார்.

திறமையான இராணுவ அதிகாரிகள், அதிசிறந்த விளையாட்டு வீரர்கள், பரம்பரை பரம்பரையாக உரிமை கோருபவர்கள், பாரம்பரிய கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு இனிமேல் ஜனாதிபதி வேட்புமனு வழங்கக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்பும் திறமை உள்ள ஒருவருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...