புதிய இலஞ்ச – ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் : ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரம்!

Date:

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய இலஞ்ச – ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு தரப்பினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின் பிரகாரம், இலங்கை மற்றும் வெளிநாடுகளுடனான உடன்படிக்கைகளை செய்துகொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் அல்லது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு வெளிநாட்டு சட்ட அமலாக்க நிறுவனத்தால் நிறுவப்பட்ட சர்வதேச அமைப்புகளுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் அதிகாரம் இதன் ஊடாக ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின்படி குற்றம் இழைத்ததாக நம்பும் எந்தவொரு நபரையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைகுழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் சில விதிகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதே புதிய சட்டத்தின் நோக்கம் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள்...