வெளிநாட்டில் தஞ்சம் அடைய வேண்டிய தேவை இல்லை

0
35

வெளிநாட்டில் சென்று தஞ்சம் அடைய வேண்டிய தேவை தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் தென்கொரியாவில் சென்று தஞ்சமடைய உள்ளதாக ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருவதாகவும் தென்கொரியா மாத்திரம் அன்று உலகில் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் சென்று தஞ்சம் பெற வேண்டிய தேவை தனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவு இருப்பதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச தொழிலாளர் தின கூட்டம் கம்பஹா நகர சபை வளாகத்தில் இடம்பெறும் எனவும் கட்சியில் அதிகாரம் பெற்றவர்கள் அதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here