33% தகுதியற்ற குடும்பங்களும் சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொள்கின்றன!

Date:

தற்போது சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்களில் ஏறக்குறைய 33% குடும்பங்கள் திட்டத்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள் என பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) தெரிவித்துள்ளது.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக COPA குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவைப் பெறுபவர்களில் 33 வீதமானவர்கள் அதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கும் அதேவேளை, கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் அதே வீதமானவர்களுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, மொத்தமாக 449,979 குடும்பங்கள் சமுர்த்தி மானியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டதாகவும் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...