33% தகுதியற்ற குடும்பங்களும் சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொள்கின்றன!

Date:

தற்போது சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்களில் ஏறக்குறைய 33% குடும்பங்கள் திட்டத்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள் என பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) தெரிவித்துள்ளது.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக COPA குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

இதன்படி, சமுர்த்தி கொடுப்பனவைப் பெறுபவர்களில் 33 வீதமானவர்கள் அதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கும் அதேவேளை, கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் அதே வீதமானவர்களுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, மொத்தமாக 449,979 குடும்பங்கள் சமுர்த்தி மானியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டதாகவும் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...