இலங்கைக்கு மேலும் கடன் சலுகை வழங்க இந்தியா இணக்கம்

Date:

இலங்கைக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த தொகை கடந்த மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இந்திய தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் நிவாரணம் 2024 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“ஒரு பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தில் இன்னும் 350 மில்லியன் டொலர்கள் எஞ்சி இருக்கிறது. அந்த பணத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது’’ என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...