மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவை நகரில் இன்று இன்று காலை நடந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த சிலர், அவரது வாகனத்திற்கும் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.இதனையடுத்து தனது கைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் அவரது சாரதி எனக் கூறப்படும் நபர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறபடுகிறது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை தாக்கி, வாகனத்தை நடு வீதியில் கவிழ்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...