Saturday, September 28, 2024

Latest Posts

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய சஜித் நடவடிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைகொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட வலுவான ஆதரவை வழங்குமாறு இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இந்நிலைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் செயற்படுத்தப்பட்டுவரும் “எதிர்க்கட்சியின் மூச்சு” வேலைத்திட்டம் மூலம் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டதோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியால் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.