எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றது.
சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்றது சந்திப்பின் போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மரண அடி மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.