ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

Date:

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (25) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது.

இதற்குப் பிறகு சிறிது நேரத்தில் விமலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்புகொண்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது வழக்கமான நகைச்சுவைத் தொனியில் மகிந்த, “பழைய நண்பர் இன்னும் அந்த காதலை விடலையா?” என்று கேட்டதாகவும், அதற்கு விமல் சிரித்தபடி பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.

சில நேரம் இருவரும் பல விடயங்கள் குறித்து உரையாடிய பின்னர், “நாம் மீண்டும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ஒரு வேலை செய்வோம்” என்று கூறி மகிந்த அழைப்பை நிறைவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமலுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

உரையாடலின் போது ரணில், “பழைய நண்பர் நல்ல அளவுக்கு இலவச பிரசாரம் செய்து தந்திருக்கிறார் போல?” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டதாகவும், அதற்கு விமல் “ஆம் சார், மில்லியன் கணக்கில் பிரசாரம் கிடைத்துவிட்டது” என்று பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு ரணில், “மில்லியன் அல்ல, பில்லியன் கணக்கில் பிரசாரம் கிடைத்திருக்கிறது” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.

சில நேரம் உரையாடிய பின்னர், “இவ்வளவு பெரிய இலவச பிரசாரம் செய்து தந்ததற்காக அந்த பழைய நண்பருக்கு நன்றி கடிதமாவது அனுப்ப வேண்டும்” என்று கூறி ரணில் தனது அழைப்பை நிறைவு செய்ததாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...

யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக...