ராஜகுமாரி விவகாரம் – வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

Date:

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் நெத்திகுமாரி வீட்டில் தங்க மோதிரம் நகை திருடியதாக கூறப்படும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த பெண் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சாதாரண கடமைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தெரிவித்துள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு பொலீஸ் சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, மற்றொரு கான்ஸ்டபிள் மற்றும் இரண்டு பெண் பொலீஸ் கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மடுல்சீமவில் வசித்த ஆர்.ராஜகுமாரி மூன்று பிள்ளைகளின் தாயார் கடந்த பதினொன்றாம் திகதி உயிரிழந்தார்.

வெலிக்கடை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியின் இடமாற்றம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பிரகாரம் பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர்...