அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடிவு

Date:

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அரச துறை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (03) கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசு ஊழியர்களின் பணி மூப்பு பாதிக்கப்படாத வகையில் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியதோடு, ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

தொழில் நுட்பத் துறையினரின் அதிகளவிலான பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் திறைசேரியின் சுமையை குறைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துச் சபை மற்றும் மஹாபொல தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களால் பயிற்சியளிக்கப்பட்ட திறன்மிக்க பணியாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஊழியர்கள் வழங்கக்கூடிய அரச துறைகள் தொடர்பில் தொழிற்சங்கங்களிடம் இருந்து யோசனைகளை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...