வேட்பு மனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் அவதானம்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், அது நடைபெறுவதற்கான அறிகுறியே காணப்படாத நிலையில், வேட்புமனுக்களை இரத்து செய்து தேர்தலை அறிவித்து மீண்டும் வேட்புமனுக்களை கூட்டுவதே சிறந்தது என இதில் கலந்து கொண்ட கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தலுக்கு கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...