வேட்பு மனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் அவதானம்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், அது நடைபெறுவதற்கான அறிகுறியே காணப்படாத நிலையில், வேட்புமனுக்களை இரத்து செய்து தேர்தலை அறிவித்து மீண்டும் வேட்புமனுக்களை கூட்டுவதே சிறந்தது என இதில் கலந்து கொண்ட கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தலுக்கு கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...