எரிபொருள், உரம் பெற ரஷ்யாவின் உதவியை நாடத் தயார்

Date:

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ரஷ்யாவின் உதவியை நாடுவதற்கு 10 கட்சிகள் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட தமது குழுவினர் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் உர நெருக்கடியை தீர்ப்பதற்கு ரஷ்யாவின் ஆதரவை தொடர்ந்தும் கோரிக்கை விடுத்த குழு, அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்ப்பதாக குற்றம் சாட்டியது.

ரஸ்ய தூதுவரை சந்தித்து எரிபொருள் மற்றும் உரம் இறக்குமதிக்கு தற்போதுள்ள தடைகள் குறித்து கேட்டறிந்து

,இலங்கை தரப்பில் அவ்வாறு தடைகள் இருப்பின் அவற்றை உடனடியாக தீர்க்க தலையிட தயாராக இருப்பதாகவும் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...